×

மழை வெள்ளத்தால் மூடப்பட்ட வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலம் மீண்டும் திறப்பு

வாலாஜாபாத்: மழை வெள்ளத்தால் மூடப்பட்டு இருந்த வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலம் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.  தொடர்மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின. இதில் 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் இந்த பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து தடை செய்யப்பட்டதால்  20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால், பாலத்தின் ஓரத்தில் நின்று செல்பி எடுக்கவோ, புகைபடம்  எடுக்கவோ கூடாது என  வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post மழை வெள்ளத்தால் மூடப்பட்ட வாலாஜாபாத்-அவலூர் தரைப்பாலம் மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Wallajabad-Avalur ,Walajabad ,Walajabad-Avalur ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...