×

சங்கரன்கோவிலில் மின்னல் தாக்கி பழுதான டிரான்ஸ்பார்மர் மாற்றியமைப்பு விரைந்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய ஊழியர்கள்

சங்கரன்கோவில்,நவ.15: சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. கடந்த நவம்பர் 11ம் தேதி மாலை 4மணியளவில் மழை மற்றும் மின்னலின் காரணமாக சங்கரன்கோவில் திருநீலகண்ட ஊரணி சாலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் பழுது அடைந்தது. இதனால் வடகாசியம்மன் 1மற்றும் 2வது தெருக்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மின்வாரியம் மூலம் தற்காலிகமாக மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு பதில் மாற்று டிரான்ஸ்பார்மர் திருநெல்வேலி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் உத்தரவின் படி சங்கரன்கோவில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நகர்புறம் உதவி செயற்பொறியாளர் ரவிராம்தேஸ் உதவி மின் பொறியாளர் கருப்பசாமி தலைமையில் களப்பணியாளர்கள் விரைவாக மாற்றி மின் விநியோகம் செய்தனர்.

The post சங்கரன்கோவிலில் மின்னல் தாக்கி பழுதான டிரான்ஸ்பார்மர் மாற்றியமைப்பு விரைந்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Sankarankovil ,Sankarankoil ,Sankaran ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...