×

சரக்கு வேன் மோதி சிறுவன் பலி

தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஜக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். டிராக்டர் மெக்கானிக். இவரது 3 வயது மகன் திருமால். இந்நிலையில் சிறுவன் திருமால் நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு வேன், சிறுவன் மீது மோதியது. இதில் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த மகேந்திரமங்கலம் ேபாலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சரக்கு வேன் மோதி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jakkasamuthram ,Mahendramangalam ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி