×

நேரு சிலைக்கு மாலை அணிவிப்பு திருச்சியில் கூட்டுறவு வார விழா துவக்கம்

திருச்சி, நவ.15: திருச்சி மாவட்டத்தில் 70வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று திருச்சி அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நடைபெற்றது. திருச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். விழாவில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ஹபியுல்லா அபிபுல்லா கூட்டுறவு உறுதிமொழி வாசிக்க கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருச்சி அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் அரசு, அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ஹேமா சலோமி, சரக துணைப்பதிவாளர்கள் சாய்நந்தினி, லால்குடி சரக துணைப்பதிவாளர் பானுமதி (கூடுதல் பொறுப்பு), அரசு அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை பட்டப்பயிற்சி நிலைய முதல்வர் கௌரி, மேலாண்மை பட்டயப்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் மற்றும் கூட்டுறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த தகவல் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நேரு சிலைக்கு மாலை அணிவிப்பு திருச்சியில் கூட்டுறவு வார விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nehru Statue Commencement of Cooperative Week ,Trichy ,70th ,All India Cooperative Week ,Trichy Amaravati ,Garlanding of ,Nehru Statue Cooperative Week ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...