×

மனைவியை இழந்த துக்கம் மதுவில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை

 

திருவிடைமருதூர், நவ.15: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மணிக்குடி ஊராட்சி வஞ்சனூரை சேர்ந்தவர் முருகராஜ் (42) டிரைவர். இவரது மனைவி சுதா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு 1 மகள், 2 மகள்கள். மனைவியை இழந்த துக்கத்தில் முருகராஜுக்கு அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து பஸ் ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார். அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மனைவியை இழந்த துக்கம் மதுவில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvidaimarudur ,Murugaraj ,Sikkidi Panchayat Vanjanur ,Thiruvidaimarudur circle Tiruppanandal.… ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை