×

தொட்டிலில் விளையாடிய 10 வயது சிறுமி கழுத்து இறுகி பலி

தர்மபுரி: தர்மபுரி அதியமான்கோட்டை சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அம்ஷா. இவர்களுக்கு ரேணுகா (10), இனியா (8), ஹன்சிகா (6) என 3 மகள்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகையை 3 சிறுமிகளும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து வீட்டில் உள்ள தனி அறையில் அவர்கள் விளையாட சேலையில் தொட்டில் கட்டப்பட்டு இருந்தது. அதில் ரேணுகா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தொட்டில் சேலை ரேணுகாவின் கழுத்தை இறுக்கியது. இதில் அச்சிறுமி மயக்கமடைந்தாள். உடனடியாக பெற்றோர் ரேணுகாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post தொட்டிலில் விளையாடிய 10 வயது சிறுமி கழுத்து இறுகி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Manikandan ,Saulur ,Athiyamankot, ,Amsha ,Renuka ,Iniya ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு