×

புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன: ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

பாரிஸ்: புவியின் துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகிவரும் நிகழ்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை தொட்டுவிட்டதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு பூமி துருவம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துருவ பகுதியில் அமைந்துள்ள நாடுகள் மற்றும் பனிப்பாறைகள் உள்ள 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மனதுக்கு பின்னர் பேட்டியளித்த ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோசப் ஆஸ்ட்டா பாஸ்டர் பூமியின் வட மற்றும் தென்துருவங்களில் பனிக்கட்டி உருகுவது மிகவும் மோசமான நிலையை எட்டிவித்ததாக எச்சரித்துள்ளார். குறிப்பாக ஆர்டிக் மண்டலத்தில் பனிக்கட்டிகள் மிகவும் வேகமாக உருகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பனி உருகுதல் தொடர்பாக தங்கள் மையத்தின் செயற்கைகோள்கள் எடுத்த புதியபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் தற்போது பெரிய சவாலாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைவர் ஜோசப் தெரிவித்துள்ளார்.இந்த நூற்றாண்டின் மத்தியிலாவது கார்பன் உமிழ்வை குறைத்தாக வேண்டும் என்பது இவரது கருத்தாகும்.

பனிப்பாறைகள் உருகுவது வேகம் பிடித்திருப்பதால் கடல் நீர்மட்டம் இன்னும் வேகமாக உயர்வதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். காலநிலை மற்றம் என்ற சவாலை எதிர்கொள்ள தனிப்பட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பு தேவை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் அரசியல் தலைவர்கள் உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன: ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Earth ,European Space Research Center ,Paris ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?