×

பாக். சிறையில் இருந்து விடுவிப்பு 80 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 80 இந்திய மீனவர்கள் கராச்சியில் உள்ள மாலீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வௌிநாடுகளில் இருந்து பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வௌிநாட்டினரை வௌியேற்றும் நடவடிக்கையின்கீழ் கைது செய்யப்பட்ட 80 மீனவர்கள் வியாழக்கிழமை(அக்.9) விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ரயில் மூலம் லாகூர் வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று அட்டாரி வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post பாக். சிறையில் இருந்து விடுவிப்பு 80 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Pak ,Amritsar ,Malir Jail ,Karachi ,Dinakaran ,
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை