×

தாளவாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினம், எஸ்.எஸ்.ஐ.-கள் கோபால், பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட்

ஈரோடு: தாளவாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினம், எஸ்.எஸ்.ஐ.-கள் கோபால், பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மான் இறைச்சி வைத்திருந்த நபர் மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.2 லட்சம் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. ரூ.2 லட்சம் பேரம் பேசியது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், விசாரணை அடிப்படையில் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து கோவை மண்டல காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post தாளவாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினம், எஸ்.எஸ்.ஐ.-கள் கோபால், பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Thalawadi Police Station ,Assistant Inspector ,Ratnam ,SSIs ,Gopal ,Balasubramanian ,Talawadi Police Station ,Dinakaran ,
× RELATED 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி...