×

பெரம்பலூர் அருகே வேன்- டாரஸ் லாரி மோதல்

 

பெரம்பலூர்,நவ.11: பெரம்பலூர் அருகே வேன் மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 27 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுக்கா, எல்லன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(32). லாரி டிரைவர். இவர் நேற்று டாரஸ் லாரியில் கம்பி லோடு ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரியி லிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடலூர் மாவட்டம் வி.ஆண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(42) என்பவர் கிளீனராக சென்றார்.அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா, நாயகனை பிரியாள் கிராமத் தைச் சேர்ந்த ஜெயராஜ்(54). டெம்போ ட்ராவலர் வேன் ஓட்டுநர். இந்த டெம்போ ட்ராவல் வேனில் அரியலூர் மாவட்டம் வேணாநல்லூரில் இருந்து 25 பேர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, தேனூர் கிராமத்தில் உறவினரின் இறப்பிற்கு வந்துவிட்டு மீண்டும் வேணாநல்லூருக்கு வந்து கொண்டிரு ந்தனர்.

பெரம்பலூர்- துறையூர் சாலையில், குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் வந்தபோது டாரஸ் லாரியும், டெம்போ டிராவல்ஸ் வேனும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வேணா நல்லூரைச் சேர்ந்த பரமேஸ்வரி(36), மீனா(28), தமிழரசி(55), பாண்டியன்(35), லதா(40), ஜோதிவேல்(64), கல்பனா(22), விஜயகுமாரி (38), வேம்பு(59), குடியரசு(49), மாரிமுத்து (46), நாகராஜ் (61), அறிவழகன்(57), இன்பவள்ளி(55), வேம்பு (50), ஞானசுந்தரி(55), ரம்யா (30), குணசேகரன்(62), இந்திரா (60), சின்னபொண்ணு (59), அமுதா(45) உள்ளிட்ட 26 பேரும், லாரி கிளீனர் சிவக்குமார்(42) ஆகிய 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக பெரம்பலூர் துறையூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்த 27 பேரையும் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே வேன்- டாரஸ் லாரி மோதல் appeared first on Dinakaran.

Tags : -Taurus ,Perambalur ,Cuddalore district ,Panruti ,Van ,Taurus ,Dinakaran ,
× RELATED ரிஷபம்