×

4 வழிச்சாலை பணியை அதிகாரி நேரில் ஆய்வு

 

கடத்தூர், நவ.11:தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை வரை ஒடசல்பட்டி கூட்ரோடு வழியாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒடசல்பட்டி காட்டு பகுதியில் வளைவை சரி செய்து, சாலை அமைக்கும் பணியினை, நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, கோட்ட பொறியாளர் நாகராஜ், உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் நேதாஜி உடனிருந்தனர்.

The post 4 வழிச்சாலை பணியை அதிகாரி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Dharmapuri ,Tiruvannamalai ,Odasalpatti road ,Dinakaran ,
× RELATED ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்