×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லி. பால்கோவா விற்பனையிலும் தித்திப்பு

திருவில்லிபுத்தூர், நவ. 11: தீபாவளி பண்டிகையையொட்டி திருவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட ஸ்வீட் வகைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பால்கோவா பிரசித்தி பெற்றது. தீபாவளி மற்றும் ஐயப்பன் கோயில் சீசன், ஆடிப்பூர தேரோட்ட தினங்களில் திருவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் திருவில்லிபுத்தூரில் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன. இதனால், இனிப்பு பிரியர்கள், வாடிக்கையாளர்கள் பால்கோவாவை ஆர்டர் கொடுத்து காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து திருவில்லிபுத்தூர் ஸ்வீட் கடை உரிமையாளரான பாம்பே ரவி கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பால்கோவா விற்பனை அதிகமாக இருக்கும். பால் ஸ்வீட்ஸ்கள் விற்பனையும் அதிகமாக இருக்கும்.

இந்தாண்டு அதிகளவு இனிப்பு வகைகளை வாங்கி செல்வதால் பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. 30 வகையான இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளிக்கு தேவை அதிகமாக இருப்பதால், அதிக தொழிலாளர்களை கொண்டும், நவீன இயந்திரங்களை கொண்டும் இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறோம். இந்தாண்டு பால்கோவா கிப்ட் பாக்சும் விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லி. பால்கோவா விற்பனையிலும் தித்திப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvilli ,Diwali ,Palcoa ,Thiruvilliputhur ,Diwali festival ,Tiruvilliputhur Balkoa ,Virudhunagar district ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...