×

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர், வாட்ச்மேனுக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

திருவில்லிபுத்தூர், நவ.11: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவர் கடந்த 2018ல் செட்டியார்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கட்டிட வரைபடம் கேட்டுள்ளார். அப்போது பில் கலெக்டர் காமராஜ் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் இளங்கோ புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின்பேரில் மீண்டும் அலுவலகத்திற்கு சென்ற இளங்கோ, ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பில் கலெக்டர் காமராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த வாட்ச்மேன் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் காமராஜ், வாட்ச்மேன் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

The post ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர், வாட்ச்மேனுக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Ilango ,Dalavaipuram ,Rajapalayam ,Virudhunagar district ,Chettiarpatti ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...