×

ஊத்துக்கோட்டை அருகே தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ராஜாபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 1.87 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தார் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. இது தொடங்கப்பட்டால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். இதனால் அப்போது தார் தொழிற்சாலை வேலைகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் வேலைகள் தொடங்கியுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் கடந்த வாரம் தார் தொழிற்சாலை பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஊத்துக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் பாரதியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மெய்யூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கிய தாசில்தார், வருவாய்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mayur Urati ,Puthukoda ,Rajapalayam ,Purdue ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்