×

வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

 

திருவள்ளூர்: வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், கல்லூரி மாணவி 20 பிபி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மப்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் நேரு.(46). இவரது மகள் விஜயரசி(18). இவர், கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் புறா (எ) சரண்ராஜ்(22). அங்கு வந்து விஜயரசியின் நைட்டியை பிடித்து இழுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த விஜயரிசி வீட்டிற்கு உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பின்னால் வந்த சரண்ராஜ் கதவை எட்டி உதைத்ததால் விஜயரிசி பயந்து போனார். எனவே, வீட்டில் இருந்த 20 பிபி மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், விஜயரசியின் அண்ணன் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து மயங்கி கிடந்த விஜயரசியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விஜயரசியின் தந்தை நேரு மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சரண்ராஜை தேடி வருகின்றனர்.

The post வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்