சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (43). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ, டிபன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அருள் பிரகாஷ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2.60 லட்சம் பணம் எடுத்துள்ளார். பின்னர், பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.பின்னர், சிறிது நேரம் கழித்து பைக் எடுக்க வந்தபோது, பைக் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2.60 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அருள் பிரகாஷ், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
The post பைக் பெட்டியை உடைத்து ரூ.2.60 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.