×

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம்

சென்னை: சென்னை, பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி மற்றும் முன் குற்ற வழக்குகளைக் கொண்ட முரளிகிருஷ்ணன் வயது/39, த/பெ.ஜானகிராமன், என்பவர், C-5 கொத்தவால்சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதியப்பாதெரு- கோவிந்தப்பா தெரு சந்திப்பில் உள்ள ஶ்ரீ வீரபத்திரசாமி கோவிலுக்கு நீண்டகாலமாக வந்து செல்பவர். இன்று (10.11.2023) காலை 0845 மணியளவில், முரளி கிருஷ்ணன் அதிகமான குடிபோதையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு மேற்படி கோவிலுக்குள் சென்று, கடவுள் சிலையை நோக்கி வீசியுள்ளார்.

உடனே, அவர் பிடிக்கப்பட்டு, விசாரணைக்காக C-5 கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முரளிகிருஷ்ணன் அதிகமான மதுபோதையின் காரணமாக தெளிவற்ற மனநிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, இவர் மீது C-5 கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் வெடி மருந்துப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muralikrishnan ,Broadway, Yehukinaru ,P. Janakiraman ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...