×

பேட்டையில் மூதாட்டி தற்கொலை

பேட்டை, நவ.10: நெல்லை பேட்டை நெல்லையாபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). இவரது 2 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. வள்ளியம்மாள் இளையமகனுடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பேட்டையில் மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Petaya ,Pettah ,Valliammal ,Nellaiyapuram Keezatheru ,Nellai Pettah ,Petai ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை