×

வௌ்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன் (60). விவசாயி. நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான 7 மாடுகளை மேய்ச்சலுக்காக கிராமத்தின் அருகே உள்ள நாபலூர் கொசஸ்தலை ஆற்று பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.  அப்போது, அந்த பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது   மாடுகளுடன் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து விசுவநாதன் மற்றும் ஒரு மாட்டை மீட்டனர். மேலும், மற்ற மாடுகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பின்னர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக்கூறி அணையில் இருந்து வந்த தண்ணீரை குறைத்தனர். இதனைத்தொடர்ந்து தண்ணீர் குறைந்த பின் மற்ற மாடுகளையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்….

The post வௌ்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Visuanathan ,Lakshumipuram ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...