×

துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருள் வழங்கல்

 

துறையூர், நவ.10: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட 210 பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தீபாவளி முன்னிட்டு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், கார்த்திகேயன், இளையராஜா, செந்தில்,

ஜானகிராமன், முத்து மாங்கனி பிரபு, சுதாகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர துணை செயலாளர் இளங்கோவன், பிரபு மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர் அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

The post துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Thadharyur Municipality ,Dharayur ,Trichy district ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை