×

வந்தவாசி அருகே உணவின்றி 5 நாட்கள் தவம் 102 வயது மூதாட்டி ஜீவ சமாதி

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி(102). இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். மேலும், பொன்னுசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து செய்யாறு தாலுகா வேலியநல்லூர் கிராமத்தில் உள்ள இளையமகள் சுசீலா வீட்டில் கடந்த 43 ஆண்டுகளாக விஜயலட்சுமி வசித்து வந்தார். பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக எறும்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு மகள் நாகரத்தினம் வீட்டில் தங்கியிருந்தார். வயது முதிர்ந்தாலும் கண்ணாடி அணியாமலேயே படிக்கும் திறன் கொண்டவராக இவர் இருந்தார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் விஜயலட்சுமி ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11ம் தேதி வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்தில் உள்ள குந்த குந்தர் விசாகாசார்யர் தவ நிலையத்திற்கு சென்ற அவர், எவ்வித திட மற்றும் திரவ உணவுகளையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்டார். 5வது நாளாக நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்தவர் ஜீவசமாதி அடைந்தார். பின்னர் உறவினர்கள் அதே  பகுதியில் மூதாட்டியை அமர்ந்த நிலையில் வைத்து, கொப்பரை தேங்காய், தேங்காய் ஓடு, சந்தனக்கட்டை, நெய் மூலமாக எரியூட்டினர். …

The post வந்தவாசி அருகே உணவின்றி 5 நாட்கள் தவம் 102 வயது மூதாட்டி ஜீவ சமாதி appeared first on Dinakaran.

Tags : Jiva Samadhi ,Vandavasi ,Thiruvannamalai district ,Ponnusamy ,Erumpur village ,Vijayalakshmi ,Jain ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...