×

திருத்துறைப்பூண்டியிலிருந்து சிவகங்கைக்கு 2 ஆயிரம் மெ.டன் நெல் அனுப்பி வைப்பு

 

திருத்துறைப்பூண்டி, நவ. 9: திருத்துறைப்பூண்டியிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில் வேகன்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. திருத்துறைப்பூண்டியிலிருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் ரயில் வேகன்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 1ம் தேதி அன்று முதல் முறையாக திருத்துறைப்பூண்டியிலிருந்து ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ஈரோடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக சிவகங்கை மாவட்டத்துக்கு கடந்த 5ம் தேதி ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாவது முறையாக சிவகங்கை மாவட்டத்துக்கு நேற்று மீண்டும், 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

The post திருத்துறைப்பூண்டியிலிருந்து சிவகங்கைக்கு 2 ஆயிரம் மெ.டன் நெல் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Sivagangai ,Thiruthurapoondi ,Sivagangai district ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்