×

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்

 

திருவாரூர், நவ. 9: திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என அரசு சார்பில் மாவட்ட எஸ்.பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.இதையொட்டி திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 17 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

The post திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur SB Office ,Tiruvarur ,Tiruvarur SP ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...