- வடபழனி
- Thambaram
- Perungalathur
- தீபாவளி
- கோயம்பேடு
- கிளம்பாக்கு
- பஸ் உரிமையாளர்கள் சங்க
- சென்னை
- ஆம்னி பேருந்துகள்
- தாம்பரம்
- கிளம்பாக்
- தின மலர்
சென்னை, நவ. 9: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (9ம் தேதி) மற்றும் 10, 11ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர நகரின் 5 இடங்களில் இருந்து அதாவது மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்னி பேருந்துகள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவுபடி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில், சங்கம் நிர்ணயித்த கட்டணத்துக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பயணிகள், ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்தில் மகளிர் குழுக்கள் மூலம் உணவகம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் பொதுமக்களுக்காக தமிழக அரசு சார்பில் பூந்தமல்லியில் உள்ள தற்காலிக சிறப்பு பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், பெங்களூரு, கர்நாடகா, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்குடை, குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர உத்தரவிட்டார்.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்பாக அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்த உத்தரவிட்டார். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் மூன்று நாட்களுக்கு இந்த பகுதியில் தள்ளு வண்டியில் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் அமைக்க கூடாது. பொதுமக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இந்த பகுதியில் உணவகம் ஒன்று அமைக்கப்படும். மேலும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஏதுவாக மினி பஸ் இயக்குவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, பூந்தமல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், ஆணையர் லதா, சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் உடன் சென்றனர்.
The post தீபாவளியையொட்டி இன்று முதல் 3 நாட்கள் ஆம்னி பஸ்கள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது: கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் ஏறலாம் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.
