×

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசு ஆணையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu Consumer Goods Trade Corporation ,TMC ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Tamil Nadu Consumer Goods Purchase Corporation ,Tamil Nadu Consumer Goods ,Vanipak Kagala K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...