- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் வர்த்தகக் கழகம்
- டி.எம்.சி.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கொள்முதல்
- தமிழகத்தின் நுகர்வோர் பொருட்கள்
- வனிபக் ககலா கே. ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரசு ஆணையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.