×

நடந்து சென்ற டிரைவர் மயங்கி விழுந்து சாவு

சமயபுரம், நவ.8: மண்ணச்சநல்லூர் அருகே நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகே நடந்து சென்ற டிரைவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். லால்குடி வரதராஜ் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (43). தனியார் ட்ராவல்சில் டிரைவர். இவரது மனைவி சுவாதி. லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளங்கோவன் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக லால்குடியிலிருந்து பஸ்சில் நெ.1 டோல்கேட்டில் இறங்கியுள்ளார். அங்குள்ள ரவுண்டானா பகுதியில் நடந்து சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடந்து சென்ற டிரைவர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,No.1 Tolgate Roundana ,Manchanallur ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...