×

பள்ளி மாணவன் திடீர் மாயம்

 

தேன்கனிக்கோட்டை, நவ.8: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மாதேஷ் (13). தேன்கனிக்கோட்டை அருகே அடைக்கலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து பள்ளி விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்ற மாணவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. அதே போல வீட்டிற்கும் செல்லவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்கள்.

The post பள்ளி மாணவன் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Muniraj ,Moranapalli ,Hosur ,Krishnagiri district ,Mathesh ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால்...