×

பதிவேடு துறையில் களமேற்பார்வையாளர் பதவிக்கு டிசம்பர் 3ம் தேதி எழுத்து தேர்வு

 

காரைக்கால்,நவ.8: புதுச்சேரியில் நிலஅளவு மற்றும் பதிவேடுகள் துறையில் உள்ள 12 வரைபட வரைவாளர் மற்றும் 27 கள மேற்பார்வையாளர் பணியிடங்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் உள்ள 5 சுற்றுலா உதவியாளர் பணியிடங்களுக்கும் கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மேற்கூறிய மூன்று பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு டிசம்பர் 3ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலரும், துணை தேர்வு கட்டுப்பாட்டாளருமான கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

நிலஅளவு மற்றும் பதிவேடுகள் துறையில் உள்ள வரைபட வரைவாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 3ம்தேதி முற்பகலிலும், சுற்றுலாத்துறையில் உள்ள சுற்றுலா உதவியாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 3ம்தேதி பிற்பகலிலும் எழுத்துத்தேர்வு நடைபெறும். வரைபட வரைவாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிகளுக்கு பொதுவான எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். இருப்பினும், வரை பட வரைவாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் ஆகிய இரு பதவிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள், பொது எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் இரு பதவிகளின் ஆட்சேர்ப்புக்கு பரிசீலிக்கப்படும். மேற்கண்ட பதவிகளில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டும் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், அவர் விண்ணப்பித்த பதவிக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும். ஆட்சேர்ப்பு இணையதளத்தில் தேர்வு நடைபெறும் இடம் போன்றவற்றிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

The post பதிவேடு துறையில் களமேற்பார்வையாளர் பதவிக்கு டிசம்பர் 3ம் தேதி எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Department of Land Surveying and Registers ,Puducherry ,Dinakaran ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்