×

தகாத உறவை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்குதல்

 

சேலம், நவ.8: சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (34). இவரது தங்கையின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த அழகரசனுடன், தங்கை தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியதையடுத்து தங்கையை திருநாவுக்கரசு கண்டித்தார். இதனால் தங்கையும் அழகரசனும் சேர்ந்து திருநாவுக்கரசை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த திருநாவுக்கரசு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் திருநாவுக்கரசின் தங்ைக மற்றும் அழகரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Thirunavukarasu ,Kichipalayam, Salem ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...