×

ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300 டன் புழுங்கல் அரிசி

 

ஈரோடு, நவ. 8: தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் 1,300 டன் புழுங்கல் அரிசி வந்தது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொது விநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தெலங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இதில், முதற்கட்டமாக 2,500 டன் புழுங்கல் அரிசி தெலங்கானாவில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300 டன் புழுங்கல் அரிசி appeared first on Dinakaran.

Tags : Erote ,Erode ,Telangana ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...