×

குலசேகரத்தில் ஸ்கேன் சென்டர் ஊழியர் மாயம்

குலசேகரம், நவ.8: குலசேகரம் சானல்கரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ் (43). அவரது மனைவி ஜீவ அனி (43). இந்த தம்பதிக்கு 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது. 2 மகள்கள் உள்ளனர். ஜெஸ்டின் ராஜ் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செல்போனை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி ஜீவ அனி பல இடங்களில் தேடினார். ஆனாலும் ஜெஸ்டின் ராஜ் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. எனவே அவர் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஜெஸ்டின் ராஜை தேடி வருகின்றனர்.

The post குலசேகரத்தில் ஸ்கேன் சென்டர் ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Jestin Raj ,Chanalkarai Annanagar ,Jeeva Ani ,Kulasekara ,Dinakaran ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...