×

திருநங்கையாக மாறுவதை கண்டித்ததால் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

சென்னை:சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோகா. இவரது மகன் சேதுபதி (28). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் தனது மனைவி தரணியிடம் எனக்கு மனநிலை சரியில்லை. நான் திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன் என கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேதுபதி நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஏதோ ஒரு ரயிலில் ஏறி ஆம்பூர் வந்துள்ளதாக தனது மனைவிக்கு சுமார் 4 மணியளவில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஆம்பூர் ரயில் நிலையத்தில் தானாபூர் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் ரயில் வருவதை கண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருநங்கையாக மாறுவதை கண்டித்ததால் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ashoka ,Ambattur ,Sethupathi ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...