×

உத்திரமேரூர் அருகே ரூ.99 லட்சத்தில் அரசு கட்டிடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அருகே ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு கட்டிடங்களை எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். உத்திரமேரூர் அருகே காட்டுப்புத்தூர் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைவேலு, நதியாகோபி, ஒன்றிய அவை தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிகளில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதேப்போல், வயலக்காவூர் கிராமத்தில் ரூ.13.74 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடமும், படூர் கிராமத்தில் ரூ.27.54 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், நெய்யாடுவாக்கம் கிராமத்தில் ரூ.27.72 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், மற்றும் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிறுத்தமும், சின்னாலம்பாடி கிராமத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் என ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் பொது மக்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முரளிதரன் தகவல் தொழில் நுட்பபிரிவு அமைப்பாளர் விஷ்ணு உட்பட பலர் உடனிருந்தனர்.

The post உத்திரமேரூர் அருகே ரூ.99 லட்சத்தில் அரசு கட்டிடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,MLA ,Uttara Merur ,Sundar ,Kattupputtur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...