×

சில்க் இந்தியா சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை: ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சில்க் இந்தியா சார்பில், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், தீபாவளி சிறப்பு கலெக்‌ஷன் என்ற கருப்பொருளில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்களின் நெசவுகள் மற்றும் பாரம்பரிய தூய பட்டு, பருத்தி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பட்டு மற்றும் காட்டன் புடவைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், பேஷன் நகைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட 50,000க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 27 முதல் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று காலை 10.30 மணி முதல் இரவு 8:30 மணி பொதுமக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கலாம். இதுகுறித்து சில்க் இந்தியா – திருமண சிறப்பு கலெக்‌ஷன் அமைப்பாளர் மனாஸ் ஆச்சார்யா கூறுகையில், ‘‘கைத்தறி கண்காட்சியின் முக்கிய நோக்கம் நெசவாளர்களை ஊக்குவிப்பதும், கைத்தறி தொழிலுக்கு சந்தையை வழங்குவதும் ஆகும். நெசவாளர்களிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தூய பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது,’’ என்றார்.

The post சில்க் இந்தியா சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை: ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Silk India ,YMCA ,Chennai ,Diwali ,Rayapetta YMCA ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...