×

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி.ஆசிரியர் கைது

நாகர்கோவில்: நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் ெஜனிகர் பிரபு (38). கன்னியாகுமரி அருகே பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் மீது அதே கல்லூரி மாணவி ஒருவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கல்லூரி மைதானத்தில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக, ஆசிரியர் ஜெனிகர் பிரபு தொந்தரவு செய்து மிரட்டல் விடுத்ததாகவும், கல்லூரி நிர்வாகம் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காததால் புகார் அளிப்பதாகவும் கூறி இருந்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜெனிகர் பிரபு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். ஏற்கனவே குமரியில் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.

இதே போல் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவரை தொல்லை செய்ததாக, சீனியர் டாக்டர் ஆன்டணி சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராசு (59). இவர் பள்ளி இறைவணக்கத்தின் போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரின்படி போலீசார் வழக்குபதிந்த நிலையில், தலைமை ஆசிரியர் தலைமறைவானார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜூ விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் சின்னராசுவை சஸ்பெண்ட் செய்தார்.

The post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி.ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : PD ,Nagercoil ,Yejanikar Prabhu ,Panagudi ,Nellai district ,Kanyakumari ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...