×

பல்பொருள் அங்காடியில் பணம், மளிகைப் பொருட்கள் திருட்டு: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (56). இவர் மணவூர் ரயில் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 9.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ராமதாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5,600 பணமும், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராமதாஸ் திருவாலங்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பல்பொருள் அங்காடியில் பணம், மளிகைப் பொருட்கள் திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Ramadas ,Manavur ,Tiruvallankadu, Tiruvallur district ,Manavur railway station ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்