×

மணவூர் ரயில் நிலையம் அருகே பல்பொருள் அங்காடியை உடைத்து கொள்ளை

திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (56). மணவூர் ரயில் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த பணம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய் வகைகள் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராமதாஸ், திருவாலங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மணவூர் ரயில் நிலையம் அருகே பல்பொருள் அங்காடியை உடைத்து கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Manavur railway station ,Thiruvallur ,Manavur ,Tiruvalangadu ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்