×

சைக்கிள் கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை அடித்த வாலிபர் கைது

 

அன்னூர், நவ.7: அன்னூர் காவல் நிலையம் பின்புறம் வசித்து வருபவர் மைதீன். இவர், அன்னூர் கைகாட்டி பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மொயின் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 26ம் தேதி பூலுவபாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து, அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் இன்பெக்டர் நித்யா, எஸ்ஐ விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், விசாரணை நடத்தினர். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் சைக்கிள் கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அன்னூரில் இருந்து கோவை வரை சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் கொள்ளையில் ஈடுபட்டவர் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த அன்னூர் போலீசார் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான தினேஷ் குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

The post சைக்கிள் கடை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை அடித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annur ,Mydeen ,Annur Police Station ,Annoor Kaigatti ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...