×

யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சட்ட விரோதமாக தந்தங்களை விற்க முயன்றதாக கோத்தகிரியை சேர்ந்த பிரதீஷ் (27), சின்னப்பாண்டி (45), சுப்பிரமணி (43), ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி (43) என்பவரிடம் தந்தத்தை விற்பனை செய்வதற்காக விலை பேசி உள்ளதும், சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் (41) பிரதீஷ் தந்தத்தை வாங்கியதும், ராஜ்குமாருக்கு அரக்கோடு பகுதியைச் சேர்ந்த நஞ்சுண்டன் (36) என்பவர் தந்தத்தை கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்குமார், குணசேகரன், நஞ்சுண்டன், இவர்களுக்கு உதவிய சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விற்பனையில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம் பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டைத்தடுப்பு காவலரான மணிகண்டன் (27) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

The post யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Pratish ,Chinnapandi ,Subramani ,Kothagiri ,Mettupalayam-Ooty road ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...