×

நள்ளிரவில் மாந்திரீக பூஜை? வீட்டு வாசலில் ரத்தத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்: அருப்புக்கோட்டை அருகே மக்கள் பீதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வீடுகள் முன்பு ரத்தத் துளிகள் சிதறி கிடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உச்சிக்கோயில் 4வது தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் நேற்று காலை வாசல் தெளிப்பதற்காக பெண்கள் எழுந்து வந்த போது, வீடுகளின் முன் ரத்தத் துளிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு வீட்டில் ‘பி.ஆர். இன்று இரவு’ என்று ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், தெருவின் மையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வந்து பார்வையிட்டனர். வீடுகள் முன்பு சிதறி கிடந்தது ஆட்டு ரத்தமா அல்லது மனித ரத்தமா என்பதை கண்டறிய பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுபோல, கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5வது தெருவில் வீட்டு வாசல்கள் முன்பு ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. பில்லி, சூனிய, மாந்திரீக பூஜைகளுக்காக இதுபோன்ற சம்பவங்கள் செய்யப்படுகிறதா என இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நள்ளிரவில் மாந்திரீக பூஜை? வீட்டு வாசலில் ரத்தத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்: அருப்புக்கோட்டை அருகே மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Sokkalingapuram, Virudhunagar District… ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...