செங்கல்பட்டு: மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு நகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்ஷயா நகர் அடுத்துள்ள லேக் வியூ அவென்யூ என்ற பகுதியில் முறையாக சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது. சாலை, தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக சேறும் சகதியமாக காட்சியளிக்கிறது. உடனடியாக, இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.