புழல்: சோழவரம் அடுத்த அலமாதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். முடி திருத்தும் தொழில் செய்து வரும் இவரது மகள் சரண்யா(16) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் அதிகரித்ததால் நேற்று முன்தினம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
The post மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி appeared first on Dinakaran.
