×

கத்தியால் வெட்டிய வழக்கில் நண்பர்கள் இருவர் கைது

ஆவடி: குடிபோதையில் நண்பரை கத்தியால் வெட்டிய வழக்கில், நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வினோத் (31). இவர் கடந்த 4ம் தேதி இரவு, பெரியார் நகரில் நண்பர்களுடன் மது அருந்தும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆத்திரமடைந்த நண்பர்களான அரவிந்தன் மற்றும் முகிலன் இருவரும் சேர்ந்து கத்தியால் வினோத்தின் தலையில் கிழித்து விட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும். திருநின்றவூர் போலீசார் வினோத்தை மீட்டு திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருநின்றவூர் போலீசார், தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(31) மற்றும் முகிலன்(23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கத்தியால் வெட்டிய வழக்கில் நண்பர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruninnavur Periyar Nagar ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…