×

தெரு விளக்கு வயரை அறுத்து; உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதலன் தற்கொலை: கள்ளக்காதலி பிரிவால் விபரீத முடிவு

திருவள்ளூர்: தெருவிளக்கு வயரை அறுத்து தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதலன் தற்கொலை செய்துள்ளார். கள்ளக்காதலி பிரிந்துச்சென்றதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அருகே ராமதண்டலம் கிராமத்தில் உள்ள ஏரி அருகே இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல்படி, புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்தனர். பின்னர் அங்கு கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(45) என்பதும் கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ராமதண்டலம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக சுற்றிவந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை பற்றி விசாரித்தபோது கள்ளக்காதலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கடந்த 4 நாட்களாக மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட வெங்கடேசன், ராமதண்டலம் ஏரியில் அமைக்கப்பட்டிருந்த தெரு மின்விளக்கின் வயரை அறுத்து அதன் மூலம் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post தெரு விளக்கு வயரை அறுத்து; உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதலன் தற்கொலை: கள்ளக்காதலி பிரிவால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kallakadali ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...