×

நாங்குநேரி, மூன்றடைப்பு பகுதியில் 65 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு

 

நெல்லை, நவ.6: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ₹65 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆடுகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கூந்தன்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலந்தபெருமாள்(42). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் கட்டிவைத்திருந்த ஆடுகளில் ₹20 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள் மாயமானது. இதுபோல் அம்பலம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் வீட்டில் கட்டிவைத்திருந்த ₹15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஆடு மாயமானது.

இதுகுறித்து இருவரும் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் நாங்குநேரி அருகே பட்டன்பிள்ளைபுதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(45). இவரது வீட்டில் வளர்த்து வந்த ₹30 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாங்குநேரி, மூன்றடைப்பு பகுதியில் 65 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nanguneri, Triad ,Nella ,Nella district ,Dinakaran ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...