×

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

 

திருவிடைமருதூர், நவ.6: பேராவூரணியில் சைக்கிள் ஸ்டாண்டில் சில்லறை மாற்ற வந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை ரயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த 2 மாதமாக முகாமிட்டு வேலை செய்து வருகின்றனர்.பழைய பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் சைக்கிள் ஸ்டாண்டில் சிவாவின் பெண் குழந்தையான சிறுமி 200 ரூபாய்க்கு சில்லறை மாற்ற சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஆடுதுறை காலனி தெருவை சேர்ந்த கோபால் மகன் சிவக்குமார் (35) சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்களும், பெற்றோர்களும் ஓடிச்சென்று பெண் குழந்தையை காப்பாற்றினர்.பின்னர் அனைவரும் சேர்ந்து சிவக்குமாருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிவக்குமாரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததால் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். திருவிடைமருதூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : POXO ,Thiruvaymarathur ,Peravurani ,Boxo ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது