×

தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

 

தூத்துக்குடி, நவ.6: தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு சுனாமி காலனியை சேர்ந்த சந்தியாரப்பனின் மகன் சாம்சன் (19). தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் வி.எம்.எஸ். நகரிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய இவரது மனைவி, கடனுக்கான நிலுவை தொகையை கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து அந்நிறுவனத்தின் மேலாளரான சந்தானத்தின் மகன் மரியபாண்டி (37) என்பவர், கடந்த 3ம்தேதி, சாம்சனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த சாம்சன், மரியபாண்டியை கத்தியால் தாக்கியதோடு, அவரது பைக்கையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் எஸ்ஐ மரியஇருதயம் மற்றும் போலீசார், சாம்சனை கைது செய்தனர்.

The post தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Samson ,Chanthiyarappan ,Threspuram North Tsunami Colony, Thoothukudi ,Thoothukudi Chinnakannupuram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...