×

சங்கரன்கோவிலில் திருவிழாவுக்கு வந்த சென்னை வங்கி ஊழியரை காரில் கடத்தி தாக்குதல்: இருவர் கைது

 

சென்னை, நவ.6: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டாடைகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பக மாரி. இவர்களுக்கு கவி பாலகிருஷ்ணன் என்ற மகனும், சன்சிகா சுருதி என்ற மகளும் உள்ளனர். கனராஜ் தனது குடும்பத்துடன் சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். கனகராஜ் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் மொய் வைப்பது தொடர்பாக உறவினர் சரவணகுமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி கோயில் திருவிழாவிற்காக கனகராஜ் குடும்பத்துடன் சொந்த ஊரான பட்டாடைகட்டிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி மாலை கனகராஜ், வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சரவணகுமார் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கனகராஜ் வாயில் துணியால் அடைத்து பலமாக தாக்கி கடத்திச் சென்றனர். இதுகுறித்து கனகராஜ் மனைவி செண்பக மாரி சின்ன கோவிலாங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பட்டாடைகட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார், அருண்குமார், விக்னேஷ், ராஜதுரை, அமிர்தராஜ், வெற்றிசிவா ஆகிய 6 பேர் மீது சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே காரில் கடத்திய கும்பல் கனகராஜை சரமாரியாக தாக்கிவிட்டு, 2ம் தேதி ஊத்துமலை அருகே இறக்கி விட்டு சென்றது. இதையடுத்து காரில் கடத்திய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜதுரை, அமிர்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

The post சங்கரன்கோவிலில் திருவிழாவுக்கு வந்த சென்னை வங்கி ஊழியரை காரில் கடத்தி தாக்குதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sankaran temple ,Kanagaraj ,Pattaigatty village ,Sankarankovil ,Tenkasi district ,Sankaran temple festival ,Dinakaran ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு