×

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

 

திருவள்ளூர், நவ. 6: திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன், உதவி செயற் பொறியாளர்கள் குமார், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, கஜேந்திரன், பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சரவணன் தங்கம் தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில், தங்களது பகுதியில் புதியதாக மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் அமைத்தல், பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை அமைத்தல் உள்ளிட்டபல கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

அதே போல் தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதியதாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டியும், பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை மாற்றி புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டியும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்து தருமாறும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சரவணன் தங்கம் மனு அளித்தவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Consumer Grievance Redressal Day ,Thiruvallur ,Electricity Board Executive Engineer's Office ,Thiruvallur, Periyakuppa ,Power Consumer Grievance Redressal Day ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி