×

4 கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

 

காஞ்சிபுரம், நவ. 6: காஞ்சிபுரத்தை அடுத்த நல்லூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் வழியாக ஏனாத்தூர் செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள், நல்லூர் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயில், நாகாத்தம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், சித்தி விநாயகர் கோயில் ஆகிய 4 கோயில்களின் உண்டியல்களை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலையில் கோயிலுக்குச் சென்ற அப்பகுதி மக்கள் உண்டியல் உடைக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், கோயில்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் வந்து செல்வது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 கோயில் உண்டியல்களிலும் சேர்த்து ரூ.15 ஆயிரம் சுமார் 2 கி.மீ தொலைவில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் உண்டியல் பணம் திருடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post 4 கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Nallur village ,
× RELATED காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு...